திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்க்கும் ஒருவர் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அறிந்த ஏட்டு மாணவியின் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளார். அதன் பிறகும் மாணவியின் பெற்றோர் உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். அந்த புகார் மனு குறித்து உயர் அதிகாரிகளும், உளவு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.