விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தலைமையிலான குழுவினர் அமலனின் மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லாததால் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமலன் மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான அமலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்….” கர்ப்பமாக்கி கைவிட்ட திருமணமான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே…
Read moreபடம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்… தியேட்டரில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்… அச்சச்சோ என்னாச்சு…? போலீசார் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. திரையரங்கம் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சந்தோஷ் திரையரங்கத்தின் மேற்கூரையின் ஒரு…
Read more