விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தலைமையிலான குழுவினர் அமலனின் மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லாததால் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமலன் மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான அமலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“12 நாளாக தாயின் பிணத்துடன் வாழ்ந்த மகன்கள்”… துர்நாற்றம் தாங்க முடியாமல் பிணத்தை காட்டில் வீசிய அதிர்ச்சி… கண் கலங்க வைக்கும் காரணம்…!!!!
நாகப்பட்டினம் மாவட்டம் கப்பட்டினம் அருகே, சாக்கு மூட்டையில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில், சடலமாக இருந்தவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 75 வயதான மும்தாஜ் என்பதும், அவரது இரு மகன்கள் தாயை அடக்கம் செய்ய முடியாமல்…
Read moreஅதிரும் மதுரை..! “ரூ.42 லட்சம் கொள்ளை”… அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கார் ஓட்டுனர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்திலும்,…
Read more