தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நிலஞ்சனூர் கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோமியோபதி படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் அரும்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகத்திற்கு சென்று சில சான்றிதழ்களை சமர்ப்பித்து மருத்துவராக பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் சண்முகம் சான்றிதழ்களை ஆய்வு செய்த போது அது போலியானது என்பது தெரியவந்தது. உடனடியாக சந்தோஷ்குமார் பிடித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் சந்தோஷ் குமார் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.