ஈரோடு மாவட்டத்திலுள்ள வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் அமித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமா என்ற மனைவி உள்ளார். கடந்த பத்தாம் தேதி அமித் குமார் குடும்பத்துடன் சொந்த ஊரான உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அமித் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஊருக்கு சென்ற தலைமை ஆசிரியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“என்னால பார்க்க முடியல…” 70 வயது தாயை கொன்ற மகன்…. தங்கை கண் முன்னே நடந்த கொடூரம்…. பகீர் பின்னனி…!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு 72 வயது ஆகிறது. இவரது மனைவி மாரியம்மாள். 70 வயதான மாரியம்மாள் நோய்வாய்ப்பட்டு படுத்து படுக்கையாக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜகோபால்(40) என்ற மகன் உள்ளார். நோயால் வலி தாங்க முடியாமல்…
Read more“நாடக கலைஞருடன் சென்ற மனைவி….” 4 ஆண்டுகளாக தனிமையில் உல்லாசம்…! நடுரோட்டில் வெட்டி சாய்த்த கணவர்…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த நாடகக் கலைஞர் வெங்கடேசன் (44). அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மப்பாவின் மனைவிக்கும் கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்துக்கு மாறான உறவு இருந்து…
Read more