தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியாம்பட்டி பகுதியில் தொழிலதிபரான குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் குப்புசாமி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் உள்பட 3 பேரிடம் 60 லட்சம் கடன் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கடன் தருவதாகவும், உரிய வட்டி தொகை செலுத்தி, கடனுக்கு ஈடாக நிலம் தொடர்பான ஆவணத்தை பதிவு செய்து தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதன்படி குப்புசாமி தனக்கு சொந்தமான இடத்தை அவர்கள் பெயரில் பதிவு செய்ய முன்வந்தார்.

அப்போது அவர்கள் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை குப்புசாமியிடம் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை இரண்டு நாட்களில் தருவதாக அவர்கள் கூறியதால் குப்புசாமி தனது நிலத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர்கள் பணத்தை தராததால் குப்புசாமி தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மணிவண்ணன், அருள் வடிவேல், ராமு ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.