
தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மற்றும் பள்ளியில் பணி புரியும் பிற ஊழியர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டால், பதிவு செய்யப்பட்ட 4 நாட்களில் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யபடுவர் என உத்தரவிட்டுள்ளது.
போக்சோ தொடர்பான வழக்கு பதிவான பள்ளியில் முதல் கட்ட விசாரணையை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முதலில் மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த முதற்கட்ட விசாரணை காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட விசாரணைக்கு இணையானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.