பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன்படி நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசால் பிரதமர் மோடியின் நண்பர்களே பலனடைவதாக கூறி உள்ளார்.

மேலும் நாட்டில் ஏழை மக்களின் வருமானமானது 50% குறைந்துள்ளது. அதே சமயத்தில் பணக்காரர்களின் வருமானம் 40% அதிகரித்து உள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் வருமானம் 10% சரிந்துள்ளது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை பொதுமக்களை எவ்வளவு துன்பப்படுத்தினாலும் சூட்-பூட் அரசின் ஒரே இலக்கு(பிரதமர் மோடியின்) நண்பர்களின் கஜானாவை நிரப்புவது மட்டும்தான்” என அவர் கூறி உள்ளார்.