அதிமுக உடனான பேரத்தை அதிகப்படுத்தவே பாமக தரப்பிலிருந்து முதல்வரை சந்தித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, திமுக-விசிக இடையேயான கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது.

ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். அது நாங்கள் தோழமையுடன் சுட்டி காட்டுகின்ற ஒன்று என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். அதனை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி மேற்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தை நிரூபித்துள்ளதாக திருமாவளவன் பெருமை தெரிவித்துள்ளார்.