
தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது, பிற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்புச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
போஜ்புரி, மைதிலி, அவதி, ப்ராஜ், புந்தேலி, கர்வாலி, குமாவோனி, மாகஹி, மார்வாரி, மால்வி,சத்தீஸ்கர்ஹி, சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, குர்மலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பலர் இப்போது உயிர் பிழைப்பதற்காக மூச்சுத் திணறுகிறார்கள். ஒரு ஒற்றை இந்தி அடையாளத்திற்கான உந்துதல் பண்டைய தாய்மொழியைக் கொல்லும். தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன! என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்தப் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது,” தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கு சில அரசியல் காரணங்கள் உள்ளன. புதிய கல்விக் கொள்கை 2020இல் இந்தியை மட்டுமே நாங்கள் கூறவில்லை. தாய் மொழியில் தான் அனைத்து மாநிலங்களிலும் கல்வி கற்பிக்கப்படும்.
தமிழில் தான் கல்வி கற்பிக்கப்படும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்தியா பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்துகிறது. இதில் இந்தி, தமிழ், ஒடியா, பஞ்சாபி உள்பட எல்லாம் மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிலரின் அரசியல் ஆசைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் அரசியல் காரணங்களால் இதை சிலர் எதிர்க்கிறார்கள்”என விளக்கம் அளித்து இருந்தார்.