மத்தியபிரதேசத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பெண்களுக்கு மாதம் ரூபாய்.1,000 வழங்கும் “முக்கியமந்திரி லட்லி பெஹனா யோஜனா” எனும் திட்டத்தை நேற்று துவங்கி வைத்தார். அந்த வகையில் வருமான வரி செலுத்தாதவர்கள் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் கொண்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

இதற்கு இந்த மாதம் 15-ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மே 31ம் தேதி பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 10ஆம் தேதியிலிருந்து அவர்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும். இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூபாய்.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.