உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான இத்திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகி இருக்கின்றது. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக தீபிகா படுகோனின் காவி நிற நீச்சல் உடை சர்ச்சையை ஏற்படுத்தியது. இது படத்திற்கு விளம்பரமாக அமைந்தது. இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆனால் இத்திரைப்படம் ஒரு தேசபக்தி திரைப்படமாக கொடுத்து அனைவரையும் படக்குழு ஆச்சரியப்பட செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் திரைப்படம் வெளியான நிலையில் தற்போது வட மாநிலங்களில் மீண்டும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றது. இத்திரைப்படம் வெளியாகும் திரையரங்கு முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பீகாரில் இருக்கும் பகல்பூர் பகுதியில் தியேட்டர் முன்பாக வைக்கப்பட்டிருந்த தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கானின் உருவ பேனர்களை கிழித்து தீ வைத்து எரித்தனர். இத்திரைப்படத்தை புறக்கணிக்கும்படி சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக்குகளும் தற்போது ட்ரெண்டாக்கி வருகின்றார்கள். இருப்பினும் எதிர்ப்பை மீறி திரையரங்கில் பதான் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கின்றது. மேலும் ரசிகர்களும் ஆர்வத்தோடு படத்தை பார்த்து வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.