வில்லன் வேடத்தில் நடித்து வந்த நடிகர் தற்போது நகைச்சுவை நடிகராக மாறியுள்ளார்.

ஆசை ஆசையாய் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவி மரியா. இவர் மேலும் வெயில், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தற்போது நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியுள்ளதாவது, எனது நகைச்சுவை வேடங்கள் வரவேற்பை பெற்றிருக்கின்றது.

காட்டேரி திரைப்படத்தில் நான் நடித்த நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவு பேசப்பட்டது. இதனால் நிறைய திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றது. நான் வில்லனாக நடித்த போது சிறுவர்கள் என்னை பார்க்கும் போது பயந்தார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்னிடம் அனைவரும் வந்து சிரித்து பேசுகின்றார்கள்.

மேலும் புகைப்படமும் எடுக்கின்றார்கள். நான் வில்லன், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நன்றாக நடிப்பதாக வாசு, சுந்தர்.சி உள்ளிட்ட இயக்குனர்கள் என்னை பாராட்டி ஊக்க படுத்தினார்கள். மேலும் நகைச்சுவை நடிகரராக நடிக்கும்படி பலர் வற்புறுத்தினார்கள். இது விரைவில் நடக்கும். வில்லனாக நடிப்பதை விட நகைச்சுவை வேடத்தில் நடிப்பது மனதுக்கு நிறைவை தருவதாக கூறியுள்ளார்.