தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா மயோசிடிஸ் என்னும் தசைனார் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறார். இதுகுறித்து பொதுவெளியில் அதிகம் பேசாமல் இருந்த சமந்தா தற்போது படப்பிடிப்பு மற்றும் அது தொடர்பான வேலைகளில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சமந்தா நடித்த யசோதா திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகிறது.
அடுத்ததாக பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கிய சாகுந்தலம் என்கிற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சுறுசுறுப்புடன் வேலைக்கு திரும்பிய சமந்தா சாகுந்தலம் படத்தின் டப்பிங் வேலைகளை தொடங்கியுள்ளார். மேலும் “கலை தான் நம்மிடம் உள்ள அனைத்து வருத்தங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் ஒன்று” என சமந்தா தெரிவித்துள்ளார்.