கன்னியாகுமரிக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் சென்று திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது.

நேற்று முன்தினம் காலை கடலை நீர்மட்டம் தாழ்வாக இருந்ததால் படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து கடல் நீர்மட்டம் பகல் 1 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பியதும் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. சுமார் 5 மணி நேரம் படகுகள் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பின்னர் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்த்துவிட்டு திரும்பினர்.