
மும்பையில் உள்ள காட்கோப்பர் பகுதியில் சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளை விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் சிப்ஸ் வாங்குவதற்காக வந்த ஒருவர் கடையில் உள்ள ஊழியரிடம் “மராட்டி பேச தெரியுமா? சீக்கிரம் கற்றுக்கொள்” என்று அதட்டினார். அதற்கு அந்த ஊழியர் “நான் UP யில் இருந்து வந்தவர். 2 நாள்ல எப்படி மராட்டி கத்துக்க முடியும்? என்று அமைதியாக பதிலளித்தார்.
ஆனால் அந்த நபர் ஊழியரின் பதிலை கண்டுகொள்ளாமல் “நாளை முதல் மராட்டி பேசவில்லை என்றால் கடையை மூட வைத்து விடுவேன்” என்று மிரட்டினார். அதற்கு கடை ஊழியர் “கற்பதற்கு நேரம் தேவை, உடனடியாக கற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியதும் கோபமடைந்த அந்த நபர் “15 நாட்களில் திரும்பி வருவேன். மராட்டி கற்றுக் கொண்டாயா என்று பார்ப்பேன். இல்லையென்றால் கடையை மூட வைத்து விடுவேன்” என்று மிரட்டி விட்டு சென்றார்.
Kalesh b/w a Shopkeeper and a Guy over Not speaking Marathi in Maharashtra:
pic.twitter.com/peZUBNpXtq— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 20, 2025
மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மகராஷ்டிராவில் மொழி மோதல் தொடர்பாக நெட்டிசன்கள் மத்தியில் பல கண்டனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.