சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் உள்ள புரூர் சௌகி பகுதியில்பொலிரோ வாகனம் மீது லாரிஒன்று  வேகமாக மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் பயணம் செய்த போது இந்த விபத்து நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தது.  இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.