
சென்னை குரோம்பேட் பகுதியில் மூதாட்டியான நிரஞ்சனா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் அஸ்தினாபுரத்திற்கு செல்வதற்காக குரோம்பேட் பகுதியில் இருந்து மாநகர பேருந்தில் ஏறினார். இந்நிலையில் பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நிரஞ்சனா தேவி வைத்திருந்த கைப்பையில் 14 சவர நகை காணாமல் போனதை கண்டதும் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக நிரஞ்சனா தேவி சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த 14 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.