விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும், தடையை மீறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்துவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 2,600 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
400 கிராம் எடையுள்ள யானை தந்தம்… அதிக விலைக்கு விற்க முயன்ற நான்கு பேர் … வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி குந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தங்களை விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அந்த நபர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வனத்துறையினர் தங்களை யானை தந்தம் வாங்குபவர்கள் போல்…
Read more“எங்கள விட்டு போய்ட்டியே…” வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாயந்து சிறுவன் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஓடைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(41). இவர் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெகதீசனின் மூத்த மகன் சுனித்(10). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று…
Read more