இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது ஒரு வீடியோவில் பூனை ஒன்று காகத்தின் தலையை கவ்வி பிடித்துக் கொண்டு இருந்தது. அப்போது அந்த காகம் இறந்து கிடப்பது போல் கிடந்தது. இதையடுத்து அந்த பூனை தனது கால்களால் காகத்தை அமுக்கி பிடித்து வாயால் காகத்தின் கழுத்தை கடிக்கிறது. இருப்பினும் அந்த காகம் நகரவில்லை.

அப்போது அந்தப் பூனை காகத்தை ஒரு கேட்டின் ஓட்டைக்குள் கொண்டு செல்ல முயற்சி செய்கிறது. ஆனால் அதனால் முடியவில்லை. இதனால் இறுதியில் அந்த காகத்தை அங்கேயே விட்டு விட்டு பூனை கேட்டிற்குள் நுழைந்தது. அந்த நொடியே காகம் உயிர் தப்பி அங்கிருந்து வேகமாக பறந்து சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.