நியூசிலாந்துக்கு எதிராக வெளியூர் மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில், பாகிஸ்தான் அணி 4-1 என படு தோல்வி அடைந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற பாகிஸ்தான், மற்ற நான்கு ஆட்டங்களிலும் நியூசிலாந்தின் வீரத்துக்கு முன்னால் எந்தப் போட்டியிலும் வெற்றிப் பெற  முடியவில்லை.

அணியின் தொடர்ச்சியான தோல்விகளில் விரக்தியடைந்த ஒரு ரசிகர், வெல்லிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் “Cricket bats for sale – barely used. Call Pakistan Cricket Team” (கிரிக்கெட் பேட்கள் விற்பனைக்கு – பயன்படுத்தியதெல்லாம் இல்லை போல… தொடர்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!) என்ற பிளகார்டை தூக்கிக்காட்டினார். இந்த காட்சியின் படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

இந்த காட்சிகள் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டநிலையில் ரசிகர்கள் எவ்வளவு விரக்தியடைந்திருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. பாகிஸ்தான் அணியின் தற்போதைய தோல்விகள் அணியின் மேலாளர்களுக்கும், வீரர்களுக்கும் பெரிய சவாலாக மாறியுள்ளது.