இன்றைய டிஜிட்டல் உலகில் பான் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக இருக்கிறது. இது இந்திய குடிமக்களுக்கு ஒரு முக்கியமான ஆவணமாகும். ஏனென்றால் இந்த பான் கார்டு அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் தேவைப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியராக வருமான வரி கணக்கில் தாக்கல் செய்ய உங்களிடம் பான் கார்டு இருக்க வேண்டும். அதேபோல் என்.ஆர்.ஐ-களுக்கு இந்தியாவில் வரி விதிக்க கூடிய வருமானம் இருந்தால் அவர்கள் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். தற்போது பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.

என்ஆர்ஐ பான் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி..?

1. முதலில் என்.ஆர்.ஐ கள் இந்திய குடியுரிமை பெற்றிருந்தால் படிவம் 49 A ஐ நிரப்ப வேண்டும்.2

2. வேறொரு நாட்டின் குடியுரிமை கொண்ட என்.ஆர்.ஐ கள் படிமம் 49AA நிரப்ப வேண்டும்.

3. அதன் பின் UTIITSL மற்றும் NDSL இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

4. படிவத்தை சமர்ப்பித்த பின் உருவாக்கப்பட்ட 15 இலக்க எண்ணுடன் ஒப்புகை நகலையும் ஆவணங்களுடன் நியமிக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

5. இந்தியாவிற்குள் என்.ஆர்.ஐ வழங்கும் தகவல் தொடர்பு முகவரிக்கு ரூ.107 ஆனால் இந்தியாவிற்கு வெளியே அதன் விலை விண்ணப்ப கட்டணம் மற்றும் அனுப்பும் கட்டணங்கள் உட்பட ரூ.989 ஆகும்.

6. ஆன்லைன் விண்ணப்பங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டிடம் செலுத்த வேண்டும்.

என்ஆர்ஐ பான் கார்டு தேவையான ஆவணங்களின் பட்டியல்.

1. ஒப்புகை வடிவத்தில் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் வழங்கப்பட வேண்டும்.

2. வசிக்கும் நாட்டிலுள்ள வங்கி கணக்கு அறிக்கையின் நகல்.

3.NRE வங்கிக் கணக்கு அறிக்கையின் நகல் கடந்த ஆறு மாதங்களில் குறைந்தது 2 பரிவர்த்தனைகளுடன் முறையாக சான்று அளிக்கப்பட்டது