இந்தியாவில் சாமானிய நடுத்தர  மக்கள் முதல் அதிக வசதி படைத்தவர்கள் வரை அனைவருமே ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து மாறிவரும் வெப்பநிலை காரணமாக வீடுகள், கார், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்திலும் ஏசியின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.

அதனால் ஏசிகளில் வெப்பநிலை கட்டுப்பாடை கொண்டுவர வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் புதிய கட்டுப்பாட்டை கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து  அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஏசிகளில் பயன்படுத்தப்படும் வெப்பநிலை ஒழுங்குபடுத்துதல் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

இதற்கான தரநிலை சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைக்கப்பட உள்ளது.

அதன் பின் வீடுகள், அலுவலகங்கள், கார் என அனைத்திலும் ஏசிகளின் வெப்பநிலை மாற்றம் செய்யப்படும். இதற்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் வெப்பநிலை, பருவநிலை மாற்றம், மின்சார தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என கூறியுள்ளார்.

இதனை சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட உள்ளது எனவும், விரைவில் இதற்கான அறிவிப்பு அமல்படுத்தப்படும் எனவும் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.