சோனம் ரகு வன்ஷி என்ற பெண் தனது கணவர் ராஜாவை திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் பயணத்தில் கொலை செய்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வேதாந்த் சிங், பெற்றோர்கள் தங்கள் மகள்களை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கக்கூடாது என எச்சரிக்கையாக கூறியுள்ளார். வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vedant Singh (@vedantsir_)

இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சோனம், தனது விருப்பமில்லாத திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஹனிமூன் பயணத்தின்போது ராஜாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் சோனத்தை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில், பெற்றோர் தங்களது மகள்களின் விருப்பங்களை கருதாமல் எடுத்த முடிவுகளால் இளம் உயிர்கள் பாதிக்கப்படுகின்றன என்பது உணரப்படுகிறது.

வேதாந்த் சிங் தனது வீடியோவில் முக்கியமான இரண்டு அறிவுரைகளை வழங்குகிறார். ஒன்றாவது, திருமணத்திற்காக ஒரு பெண்ணை பார்க்கும் போது, அவர்கள் ஏற்கனவே யாருடனும்  உறவில் இருக்கிறார்களா என்பதை கேட்க வேண்டும், சமையல் எப்படி என்று கேட்க வேண்டாம் என கூறுகிறார். இரண்டாவது, பெற்றோர்கள் தங்கள் மகள்களின் விருப்பத்தைக் கேட்காமல் வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கக்கூடாது. இப்படியான நிலைகள், கடைசியில் கணவர்களுக்கு கொடூர விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று அவர் எச்சரிக்கிறார்.

இந்த வீடியோ vedantsir_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இந்த சம்பவம் குறித்து பல்வேறு விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். சிலர், “இதுபோன்ற பெண்கள் மற்ற நல்ல பெண்களின் பெயரைக் கெடுப்பதாக” குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ பெற்றோர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.