
மகாராஷ்டிராவில் மனிதர்களுக்கு மட்டுமே பாரம்பரிய அடையாளங்கள் சூட்டப்பட வேண்டும் என்ற நிலையை மாற்றி, நகர மிருகக்காட்சிசாலையில் பிறந்த பென்குயின் குட்டிகளுக்குப் மராத்தி பெயர்களை வைக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் புதிய கோரிக்கை முன்வைத்துள்ளனர். பைகுல்லா தொகுதி பாஜக தலைவர் நிதின் பங்கர், “மகாராஷ்டிர மண்ணில் பிறந்த இந்தக் குட்டிகளுக்கு ஆங்கிலப் பெயர்களுக்கு பதிலாக மராத்தி பெயர்களை வைக்க வேண்டும்.
பைகுல்லா உயிரியல் பூங்காவில் கடந்த மார்ச் மாதம், ஹம்போல்ட் பென்குயின்கள், ஆலிவ்-போபி, டெய்சி-டாம் ஆகிய ஜோடிகள் மூன்று பென்குயின் குட்டிகளை பெற்றனர். மாஞ்சு குட்டிகள் மார்ச் 3 (நோடியா), மார்ச் 7 (டாம்), மற்றும் மார்ச் 11 (பிங்கு) ஆகிய தேதிகளில் பிறந்தன. இந்த குட்டிகளுக்கு கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பெயர்களாக வைத்திருப்பது குறித்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“மராத்தி மொழிக்கு பாரம்பரிய அந்தஸ்து இருக்கின்ற போது, பென் குயின்களுக்கு மட்டும் ஏன் மராத்தி பெயர் கிடையாது?” என பங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே, மிருகக்காட்சிசாலை நிர்வாகம் மற்றும் உயிரியலாளர் டாக்டர் அபிஷேக் சதம் கூறியதாவது, இந்த மூன்று குட்டிகளும் மற்றும் அவற்றின் தாய்மார்களும் ஆரோக்கியமாக உள்ளனர்.
சிறப்பு கவனிப்பும், பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். குட்டிகள் பிறந்ததை ஒட்டி பூங்காவில் கொண்டாட்ட சூழ்நிலை நிலவுகிறது. தற்போது மொத்த பென்குயின்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் பெயர் விவகாரத்தில் அரசியல் சூடு வைக்கும் நிலையில், இது மராத்தி அடையாள அரசியலுக்கு ஒரு புதிய பரிமாணமாகவே பார்க்கப்படுகிறது.