மத்திய பிரதேச மாநிலம் பந்தம் மாவட்டத்தில் உள்ள லொதி பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. “ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது” என்ற கலெக்டர் உத்தரவை பின்பற்றிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள், 2 இளைஞர்களுக்கு பெட்ரோல் கொடுப்பதை நிராகரித்தனர். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் வீட்டிற்கு திரும்பி, ஆயுதங்களை எடுத்துவிட்டு திரும்பி வந்தனர்.
View this post on Instagram
CCTV காட்சிகளில், இரு இளைஞர்கள் பெட்ரோல் பங்க்கிற்கு வந்து, திடீரென துப்பாக்கியால் தீவிரமாக சுட்டனர். அதில், ஒரு இளைஞர் அங்கீகாரம் பெற்ற ரிவோல்வர், மற்றொருவர் சட்டவிரோத துப்பாக்கியை கொண்டு திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில், பெட்ரோல் பங்க் ஊழியர் காயமடைந்தார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போரோஹி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, CCTV காட்சியில் குற்றவாளிகளின் அடையாளங்களை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் விரைந்து கைது செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
