சென்னை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதில் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், தண்டனை கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசரகால விடுப்பு வழங்க எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.

மேல் முறையிடும் மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது விடுப்பு வழங்கக் கோரி தண்டனை கைதிகள் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியதால், மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.