
மத்திய பிரதேசம் பந்தூர்னா மாவட்டம் மோகாவன் பகுதியில் சிலர் ஒரு சிறுவனை பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு அடித்து கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுவன் கை கடிகாரம் மற்றும் சில பொருட்களை திருடிவிட்டான் என்று கூறுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலானது.
இந்த வீடியோவில் மற்றொரு சிறுவனையும் அதேபோல் கைகளை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு சிறுவனின் தலைக்கு அருகே சூடான நிலக்கரியை வைத்து அதில் மிளகாய் போட்டு புகையை சுவாசிக்க வைத்து கொடுமை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.