நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வாத்தி. இப்படம் அரசு பள்ளிக்காக போராடிய ஒரு இளம் ஆசிரியரின் கதையை மையாக கொண்டது. இதே போன்ற ஒரு போராட்ட களத்தை நிஜ வாழ்க்கையில் சந்தித்தவர் தான் கே.ரெங்கையா. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், மூடப்பட நிலையிலிருந்த அரசு பள்ளிக்கு மாணவர்களை தானே அழைத்து சென்று, படிக்க வைத்து பள்ளியை மூடவிடாமல் செய்தார்.

இந்த செயலுக்காக அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் வாத்தி படத்தின் இயக்குனரான வெங்கி அட்லூரி, ஆசிரியரான ரெங்கையாவை சந்தித்துள்ளார். அப்போது இந்த படத்தை குறித்தும், அவரது வாழ்க்கை வரலாற்றை குறித்தும் இருவரும் உரையாடி உள்ளார்கள்.  இதனையடுத்து அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் சவால்களைப் பற்றி இயக்குநரிடம் கூறினார். மேலும் இவர் ஆசிரியர் பணியில் சேர்ந்த சமயத்தில், அந்த கிராமத்து பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் இருந்தவர் வேறு இடத்திற்கு மாறியுள்ளார்.

பின்னர் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரும் பொறுப்பை தானே எடுத்துக்கொள்ள முடிவு செய்து, தொடர் பிரச்சினைகளுக்கு எதிராக பிரச்சாரங்களையும் நடத்தி, 13 ஆண்டுகளாக போராடிய பின், அந்தப் பள்ளியில் மாணவர்களை அழைத்து வந்ததாக கூறினார். இதனையடுத்து ஆசிரியரின் இந்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மாணவர்களின் நலுனுக்காக பள்ளியில் நூலகத்தை நிர்மாணிக்கவும், வாத்தி பட தயாரிப்பாளர்  சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக 3 லட்சம் ரூபாய் தொகையை நன்கொடையாக, இயக்குனர்  வழங்கினார்.