திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையிலான ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நெல்லை- திருச்செந்தூர் இடையே அனைத்து ரயில்களையும் மின்சார ரயில் இன்ஜின் மூலமாக இயக்க உத்தரவு பிறப்பித்தனர்.

இதனால் நேற்று நெல்லை- திருச்செந்தூர் இடையே மின்சார ரயில் சேவை தொடங்கியதால் ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்தனர். இதனையடுத்து ரயில்களின் கால அட்டவணையும் மாற்றம் செய்யப்பட்டு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்த வழித்தடத்தில் பயண நேரம் குறையும். மேலும் திருச்செந்தூர்-சென்னை இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்படுவதால் 1 மணி நேரம் 10 நிமிடம் வரையிலும் பயண நேரம் குறையும் என கூறியுள்ளனர்.