இந்தியாவின் பாஸ்வேர்டு பகிர்வை நிறுத்தியுள்ளதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சந்தாதாரர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ள முடியும். சுயவிவர பரிமாற்றம், பயன்பாடு மற்றும் சாதனங்களை நிர்வகித்தல் போன்ற அம்சங்களுடன் ஓ டி டி நன்மைகளை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்ததாரர்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் வருவாய் இழப்பு ஆகிய காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.