பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தமிழகம் முழுவதும் 7 நகரங்களில் மக்களோடு இணைந்து நவராத்திரி விழாவை கொண்டாட இருக்கிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை என ஏழு இடங்களில் இந்த நிகழ்ச்சியானது நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் திருவிளக்கு பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர் கலந்து கொள்ளும் பக்தி பாடல்கள் ஆகியவை  நடைபெறும்.

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் பெண்  பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டு நவராத்திரி கொண்டாட இருக்கிறார்கள். திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக் கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டோடு வந்தால் மட்டும் போதும். பூஜைக்கான அனைத்து பொருட்களுமே வழங்கப்படும். விஜய் டிவியின் பிரபலங்களோடு இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாக கொண்டாடலாம். முதலாவதாக காஞ்சிபுரத்தில் இந்த நிகழ்ச்சி முன்னதாக பல இடங்களில் நடைபெற்ற நிலையில் இன்று மதுரையில் நடைபெற இருக்கிறது.