பெண்களுக்காக காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது..

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நாரி நியாய் உத்தரவாதத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

  • இந்தத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் ரூபாய் மானியமாக காங்கிரஸ் அரசு வழங்கும்.
  • மேலும், அனைத்து அரசுப் பணியிடங்களிலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
  • ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி, மதிய உணவு பணியாளர்களின் சம்பளம் இருமடங்காக உயர்த்தப்படும்.
  • ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
  • மேலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்காக சாவித்ரி பாய் ஃபுலே விடுதிகளை நிறுவவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு பெண்கள் விடுதிகள் அமைக்கவும், தற்போதைய விடுதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.