பிரபல இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இரு பாகங்களாக இயக்கியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 4 நாட்களில் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். அவர் நான் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததில்லை.

ஆனால் முதல் பாகம் பார்த்ததால் எனக்கு இரண்டாம் பாகம் நன்றாக புரிந்தது. படத்தில் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியின் நடிப்பு அருமையாக இருக்கிறது. இதேபோன்று குந்தவையாக நடித்த திரிஷாவும் நன்றாக நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராயை இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக அவருக்கு  ஓவர் மேக்கப் போடப்பட்டுள்ளது. மேக்கப் இல்லாமல் வயதான தோற்றத்தில் வந்த ஐஸ்வர்யா ராய் அழகாக இருக்கிறார். இதேபோன்று நந்தினி கதாபாத்திரத்திலும் ஐஸ்வர்யா ராயின் மேக்கப்பை சற்று குறைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருப்பார் என்று கூறியுள்ளார்.