தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா. இவர் கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதன் பிறகு ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த கனகா தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். நடிகை கனகாவுக்கு தற்போது 49 வயது ஆகும் நிலையில் சென்னையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நடிகை கனகா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடைய கணவர் சில நாட்களில் காணாமல் போய்விட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட கனகா தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

நடிகை கனகா ஒரு பழைய வீட்டில் வசித்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக அவர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. கனகாவின் உறவினர்கள் மோசமாக பழகுவதால் தான் அவர் யாருடனும் பேசாமல் தனியாக இருந்து வருகிறாராம். இந்த விஷயத்தை அவருடைய உதவியாளர் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. கனகாவிடம் அவருடைய உதவியாளர் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கலாம் என்று சொன்னபோது பார்க்கலாம் என கூறிவிட்டாராம். மேலும் கனகாவுக்கு தற்போது அவருடைய உதவியாளர் தான் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.