செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழ்நாட்டில் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நடை பயணம் புறப்படுகின்ற அன்றைக்கு நான் பத்திரிகையாளரிடம் சொன்னேன். இது நடை பயணம் அல்ல, தமிழ்நாட்டில பாஜகவுக்கு நடைபெறுகின்ற இறுதிப் பயணம் என்று அன்னைக்கே சொன்னேன். இறுதியாத்திரை என்று அன்னைக்கே சொன்னேன்.

அதுதான் இன்னைக்கு தமிழ்நாட்டிலே நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அவங்களுக்கும் அதிமுகவுக்கான உறவு முறிஞ்சு போச்சு. இன்னும் பிரச்சார பயணத்தை முடிக்கிறதுக்குள்ள பாஜகவுக்குள்ள என்னென்ன முறிவு ஏற்படும் என்பதெல்லாம் நமக்கு நன்றாக தெரியவில்லை. பாஜக அகில இந்திய தலைவர்கள் தமிழ்நாட்டில் பாஜகவை கட்டுகின்ற மகத்தான பணியை அண்ணாமலை மேற்கொண்டு வருவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கே தெரியுமா ? தெரியாதான்னு தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் பாஜகவைக்கு சவக்குழிக்குள் அனுப்பக்கூடிய வேலையை தான் அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார் என்பது நன்றாக தெரியும்.இப்படிப்பட்ட அண்ணாமலை வழிநெடுகிலும் எதையோ பேசுவது என்கின்ற பெயரில் பெனாத்திக் கொண்டு வருகிறார். அவர் ஒரு அரசியல் முதிர்ச்சியான தலைவர் இல்லை என்பதை அவருடைய பேட்டியில் இருந்து நன்றாக தெரிகிறது என தெரிவித்தார்.