ஹைதராபாத் பஞ்சாரா பகுதியில் சாலையோரமாக செயல்பட்டு வந்த கடை ஒன்றில் விற்கப்பட்ட மோமோஸ் சாப்பிட்டு 20 பேர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பலரும் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கடையின் உரிமையாளரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

https://x.com/MinhajHussains/status/1850818144278892621