அட்லீ டைரக்டில் சென்ற 2013 ஆம் வருடம் வெளியான “ராஜா ராணி” திரைப்படத்தில் நயன்தாரா, ஜெய், ஆர்யா, நஸ்ரியா, சந்தானம் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெய்-நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். நிலேஷ் கிருஷ்ணா டைரக்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் தயாராகவுள்ள நயன்தாராவின் 75வது படத்தில் ஜெய் இணைந்திருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்து உள்ளது. நடிகர் ஜெய்யின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்காக சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது.