ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன்,  இன்றையதினம் புரட்சி தலைவர் எம்ஜிஆர்_யை சொல்லுகிறார்கள்,  புரட்சித்தலைவியை சொல்லுகிறார்கள். இருந்தாலும் அவர்களோடு எல்லாம் பழகிய எங்களுக்கு அந்த மனக்குறை இன்னும் தீரவில்லை என்பதை நான் எடுத்துச் சொல்லித்தான் ஆக வேண்டும். எல்லாம் காரியத்திற்காகத்தான் புகழ்வார்களே தவிர,  உண்மையிலே நம் தலைவர்களை யாரும் ஏற்று கொண்டதாக எனக்கு தெரியவில்லை.

புரட்சி தொண்டன் என்ற தலைப்பை அருமைமிகு ஓபிஎஸ் அவர்களுடைய புதல்வர் ஜெயப்ரதிப் சொன்னார் என்று கேட்டு நான் உண்மையிலே ஆச்சரியப்பட்டேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், அவரின் மூளையில் உட்காந்து கொண்டு சொல்லியிருப்பாரோ. அல்லது விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்… புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ? … ஆகையினாலே ஓபிஏஸ் அவருடைய குமாரர் இதை சொன்னார் என்பதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. 

ஏன் தெரியுமா ? தொண்டர்களை உண்மையாகவே நேசித்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். பொதுக்குழுவில் இருந்து அனைவரும் ஏக மனதாக அவரை நீக்கிறோம் என்று தூக்கி எறியப்பட்ட பொழுது,  இரு கையேந்தி அந்த தலைவரை தாங்கிக் கொண்டவர்கள் தமிழ்நாட்டுத் தொண்டர். அதை அவர் மறந்ததே இல்லை.. ஆகையினாலே தான் தொண்டர் மீது அவ்வளவு பாசம். அவரோடு இருந்தவர் என்கிற முறையில் சொல்கிறேன்  என தெரிவித்தார்.