தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அண்டார்டிகா கடல் பனியின் அளவு கடும் சரிவை கண்டுள்ளது. அண்டார்டிக் பெருங்கடல் ஆனது பிரம்மாண்டமான பனிப்பாறைகளையும் பனிக்கட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த கடல் பனி அளவானது உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வேகமாக உருகி வருகின்றது என்றும் இதனால் கடல் மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதனிடையே அண்டார்டிகாவின் கடல் பனி அளவு குறித்த அறிக்கையை தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அண்டார்டிகா கடல் பனியின் அளவு கடும் சரிவை கண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கிடையே இந்த ஆண்டிற்கான பனி அளவிலும் மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.