
கடந்த 2023 ஆம் ஆண்டு மாயாவதி தனது கட்சி வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார். அப்போது அவருக்கு சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த மே மாதம் பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கினார். ஆனால் அடுத்த சில வாரங்களிலே மீண்டும் அவர் அதே பொறுப்புக்கு வந்தார்.
இதற்கிடையில் மருமகனும், மாமனாரும் சேர்ந்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் 2-வது முறையாக அவர் மீண்டும் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தனது கடைசி மூச்சு இருக்கும் வரை கட்சி வாரிசை நான் அறிவிக்க போவதில்லை, கட்சி விவகாரத்தை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று மாயாவதி அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆகாஷ் ஆனந்த் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இது குறித்த அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது கட்சியிலிருந்து எனது நீக்கத்துக்கு காரணமான பதிவை எக்ஸ் தலத்தில் சில நாட்களுக்கு முன்பு போட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது உறவினர்கள் மற்றும் வெளிநபர்கள் அறிவுரைப்படி எந்த அரசியல் முடிவும் எடுக்க மாட்டேன் என்று உறுதி அளித்தார்.
அவர் வெளியிட்ட சில மணி நேரத்திலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார். இது குறித்து மாயாவதி அவர் தன் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, தவறை உணர்ந்து பொதுவெளியில் மன்னிப்பு கேட்டதால் ஆகாசுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் தான் ஆரோக்கியமாக இருக்கும் வரை கட்சிக்கு எந்த வாரிசையும் நியமிக்க போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.