மதுபான ஊழல் வழக்கில் சென்ற ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 5 தினங்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றமானது அனுமதி வழங்கியது. இந்த நிலையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தன் பதவியை ராஜினாமா செய்தார்.

சண்டிகர் யூனியன் பிரதேச அரசு, மதுக்கடைகளை அதிகாலை 3 மணி வரை திறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய கலால் கொள்கை 2023-24 வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை மதுக்கடைகள் நள்ளிரவு 1 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் நேரம் மாற்றப்பட்டது. மேலும் 750ml மதுபாட்டிலின் மீதான cess வரி ரூ.5ல் இருந்து ரூபாய் .1 ஆகவும், பீர்பாட்டில் மீதான cess வரி ரூ.5ல் இருந்து ரூ.1 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.