திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு திருவண்ணாமலையில் உரிய இடம் தேர்வு செய்து ஒதுக்கப்படவில்லை.

இதனால் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் கோயில் மாடவீதி, சன்னதி தெரு, அண்ணாசாலை, காந்திநகர் புறவழிச்சாலை, திண்டிவனம் சாலை உள்ளிட்ட கோவிலை சுற்றி அமைந்திருக்கும் வீதிகளில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.