தமிழ் திரை உலகின் டாப் நடிகரான தளபதி விஜயின் கேரியரில் மிக அதிக ட்ரோல்களை சந்தித்த படம் சுறாதான். அந்த படத்தின் கதை, காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரிதும் ரோல் செய்யப்பட்டது. விஜயின் கேரியரில் தோல்வி படமாக சுறா அமைந்துள்ள நிலையில் இப்படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டது ஏன் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இயக்குனர் கதை சொல்லும்போது சொன்ன மாஸ் வசனங்களை கேட்டு தான் விஜய் ஓகே சொல்லிவிட்டார் என விஜய் வெளிப்படையாக கூறியதாக நடிகர் மனபாலா தெரிவித்துள்ளார்.