
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. சிறிது தூரம் சென்ற நிலையில் ஆம்னி பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர், பேருந்தை ஓட்டிக்கொண்டே ஸ்டேரிங் நடுவில் உணவு பார்சலை வைத்துக் கொண்டு சாப்பிட தொடங்கினார். இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது பயணி ஒருவர் சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே? என்று டிரைவரிடம் கேட்டார். அதற்கு அவர் நேரமில்லாததால் பேருந்தை ஓட்டிக்கொண்டே சாப்பிடுவதாகவும், இது பழக்கப்பட்ட ஒன்றுதான் என்றும் கூறியுள்ளார். இதனை பேருந்தில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்