இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் சாலையில் இருவர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது அருகில் உள்ள சேரில் ஒரு குளிர்பானம் இருந்தது.

 

இதனை வழிப்போக்கர் ஒருவர் தனது கையில் எடுத்துச் சென்றார். இதனைப் பார்த்த அந்தப் பெண் வேகமாக சென்று அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது மற்றொரு நபர் மீண்டும் சேரில் மற்றொரு குளிர்பானத்தை வைக்கிறார். இதையடுத்து வழிப்போக்கர் உங்களது குளிர்பானம் அங்கே தான் உள்ளது என்று கை காட்டுகிறார்.

உடனே அந்தப் பெண் அமைதியாக திரும்பும் நிலையில், மீண்டும் அந்த நபர் சேரில் இருந்த குளிர்பானத்தை எடுத்து விடுகிறார். மீண்டும் குளிர்பானத்தை காணவில்லை என்றதும் அந்தப் பெண் தொடர்ந்து வழிப்போக்கரிடம் வாக்குவாதத்தில் எடுப்படுகிறார். இதேபோன்று மீண்டும் மீண்டும் நடக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.