LIC ஊழியர்கள் மற்றும் முகவர்களின் பணிக்கொடை வரம்பை மூன்று லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அத்துடன் அவர்களது டேர்ம் இன்சூரன்ஸ் தொகையை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தவும் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக அதிகரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக AIIEA, AIBOA தொழிற்சங்கங்கள் எல்ஐசி நிர்வாகத்துடன் ஊதிய திருத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.