தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. ம மேகங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்து மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, வழக்கமாக 40 டிகிரி சுட்டெரிக்கும் மே மாதத்தில் இந்த மழை நமக்கு வரம் என்று தெரிவித்திருந்தார்.