சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம், லெஜண்ட் சரவணா போன்றவற்றின் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட சரவண அருள், தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அவரது வணிகத் தோற்றங்களுக்காக பல ட்ரோல்களை எதிர்கொண்ட போதிலும், ஜே.டி.ஜெர்ரி இயக்கிய “தி லெஜண்ட்” என்ற தனது முதல் திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்,  வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், லெஜண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்திற்கான அப்டேட்டை  “அன்பானவன்” என்று ஹாஷ்டாக் மூலம் அறிவித்துள்ளார். “எதிர் நீச்சல்” மற்றும் “கொடி” போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வரவிருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இப்படத்திற்கான  படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் தனது உறவினர் திருமணத்தின் போது தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.