தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் உருவாகும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் தங்களது குழந்தைகளுக்காக தற்காலிகமாக மும்பையில் குடிபெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மகள் தியா மற்றும் மகன் தேவ் போன்றோரின் படிப்பிற்காக சூர்யா-ஜோதிகா தம்பதியினர் மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதற்காக இவர்கள் 70 கோடி செலவில் 9000 சதுர அடியில் வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.