2002 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு தெரிவித்து இருக்கிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் மாநில உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், குஜராத் அரசு இவ்வாறு வலியுறுத்தி உள்ளது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளின் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் மீது பதில் அளித்த குஜராத் அரசு இவ்வாறு கூறியிருக்கிறது.